Wednesday, September 9, 2015

பள்ளி அருகே பாழடைந்த கிணறு, தண்ணீர்த் தொட்டி - அச்சத்தில் குழந்தைகள் | Tirumangalam.com

கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி எதிரே பாழடைந்த கிணறு, இடியும் நிலையில் உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டியால் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடியில் பழமையான ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. 2 ஆசிரியைகள், 32 குழந்தைகள் உள்ளனர். பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையமும் உள்ளது. இங்கு 20 குழந்தைகள் உள்ளனர். ஓடுகளால் வேயப்பட்ட கட்டடம் பழுதடைந்ததால், அதை அகற்றாமல் புதிய கட்டடம் அமைக்கப்பட்டது. பள்ளி எதிரே 30 அடி அகலம் கொண்ட பாழடைந்த கிணறு மூடப்படாமல் உள்ளது. அருகே இடியும் நிலையில் பயனற்ற மேல்நிலை தண்ணீர் தொட்டியும் உள்ளது. கிணற்றில் குப்பை, இறைச்சிகள் கொட்டப்படுவதால், குழந்தைகள் மூக்கை 'பிடிக்கும்' நிலை உள்ளது. அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது.

Kalligudi Primary School Students in afraid of the old well near school. Read more

No comments:

Post a Comment