Sunday, September 6, 2015

அந்நிய படையெடுப்பினால் அழிந்துபோன கோட்டைமேடு கிராமம் | Tirumangalam.com

தொடர்ச்சியான அந்நியர்களின் படையெடுப்பினால் மொத்தமும் அழிந்துபோன கோட்டைமேடு கிராமம்
திருமங்கலம் அருகே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அந்நியர்களின் படையெடுப்பினால் அழிக்கப்பட்ட கிராமம் தான் கோட்டைமேடு. திருமங்கலம் வட்டம் நேசனேரி கிராமத்தின் வடக்கே வயல்வெளிகளின் நடுவில் சுமார் 50ஏக்கர் பரப்பளவில் ஆளுயர கோட்டைச் சுவர் எழுப்பி, மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னர்களில் ஒருவர் இங்கு கோட்டை போன்று அமைத்ததாக கூறப்படுகின்றது. இதனைச் சுற்றியுள்ள மீனாட்சிபுரம், கரிசல்களாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் தாய் கிராமமாக விளங்கியது. மழை வெள்ளம் ஏற்படும் காலங்களில் மக்கள் இங்கு தான் தஞ்சம் புகுவார்களாம். பின்னர் மதுரை மீது படையெடுத்த மாலிக் கபூரினால் தான் இந்த கோட்டையும் அழிக்கப்பட்டது என சுற்றியுள்ள ஊர் மக்கள் தெரிவித்தனர். இன்றும், இப்பகுதியில் சென்றால் முதுமக்கள் தாழி, மண்பாண்டங்கள் போன்றவை காலில் தட்டுப்படும். Read more

No comments:

Post a Comment