Thursday, May 14, 2015

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா 2015 | Tirumangalam.com

மதுரை மாவட்டம் திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா, மே 24ம் நாள் கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது.


மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரின் தெற்கு குண்டாற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் 13 நாட்கள் நடக்கும் வைகாசி திருவிழா பிரசித்தம். திருவிழாவின் ஒவ்வொரு நாளும் காலை மாலை இரு வேளைகளில் மாரியம்மன் நகர்வலம் வந்து அருள்பாலிப்பார். குறிப்பாக
5ம் நாள் குதிரையோட்டம், 6ம் நாள் சமணர் கழுவேற்றம், 7ம் நாள் பூப்பல்லக்கு, 9ம் நாள் முளைப்பாரி, 10ம் நாள் சூரசம்ஹாரம், 13ம் நாள் ஆயிரம்பொன் சப்பரத்தில் குண்டாற்றில் எழுந்தருளல்
ஆகியவை சிறப்பாகும். வைகாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற ஞாயிறன்று திருவிழா துவங்கும் அதாவது இந்தாண்டு, வருகின்ற மே 24ம் கொடியேற்றத்துடன் 13 நாள் வைகாசி திருவிழா துவங்கவுள்ளது.