Sunday, September 13, 2015

காமராசரால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரு. என். எஸ். வி. சித்தன் | Tirumangalam.com

1973ல் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் முதன்முறையாக திரு. என். எஸ். வி. சித்தன் அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் வேட்பாளராக முன்மொழிந்தவர் தமிழக முன்னாள் முதல்வர் திரு. காமராசர்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1934ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 12ம் நாள் என். எஸ். வீரபத்திரத் தேவருக்கு மகனாகப் பிறந்தார். தனது பள்ளிக் கல்வியை திருமங்கலம் பி. கே. என். பள்ளியில் பயின்று, மதுரைக் கல்லூரியில் பொருளியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் 1959ல் சகுந்தலை என்பவரை திருமணம் முடித்தார். அவரது தகப்பனார், திரு. வீரபத்திரத் தேவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் தீவிரமாக ஈடுபட்டதால், சித்தனுக்கும் காங்., கட்சி மீது நாட்டம் ஏற்படவே கட்சியின் பல்வேறு போராட்டங்களில் பங்குகொண்டார். அதன் விளைவாக 1967ல் தமிழக சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டார். அதில் தன்னோடு போட்டியிட்ட இராஜாஜியின் சுதந்திரக் கட்சி வேட்பாளர் திரு. எம். பி. இராஜன் அவர்களை விட 3,257 வாக்குகள் அதிகம் பெற்று முதல் வெற்றி கண்டார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்தித் திணிப்பை எதிர்க்கும் போராட்டத்தால் தமிழகத்தில் காங்., கட்சியின் செல்வாக்கு சரிவடைந்த (சொந்த ஊரான விருதுபட்டியில் காமராசரை தோற்கடிக்கப்பட்ட) அதே 1967ல் வெற்றி பெற்ற ஒரு சிலருள் ..

Thiru. NSV Chitthan, who was recommended for Dindigul Parliamentary Election 1973 by the former CM Thiru. Kamarasar. Read more

No comments:

Post a Comment