Thursday, September 3, 2015

திருமங்கலம் மீனாட்சி கோயில் கும்பாபிசேகம் எப்போது நடக்கும்? | Tirumangalam.com

திருமங்கலம் மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிசேகப் பணிகளுக்கு அரசிடமிருந்து போதிய நிதி இல்லாததால் பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மனுக்கு, திருமாங்கல்யம் செய்து கொடுக்கப்பட்டதாக நம்பப்படும் திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் 12 ஆண்டுகளை கடந்தும் கும்பாபிசேகம் நடக்கவில்லை. இந்தாண்டு தொடக்கத்தில், உபயதாரர்களால் மராமத்து பணிகள் துவங்கின. கோயிலுக்குள் புதிய மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டது. தற்போது மராமத்து பணி, சிலைகளுக்கு வர்ணம் தீட்டி புதுப்பிப்பது போன்ற பணிகளுக்கு போதிய நிதி இல்லை. தமிழக அரசிடமிருந்தும் எந்தவொரு அறிவிப்போ, போதிய நிதி ஒதுக்கீடோ இல்லை. நிதி ஒதுக்காததால் கும்பாபிசேக பணி தாமதமாகிறது. நிர்வாக அலுவலர் மாலதி கூறுகையில், ''விரைவில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. கோயில் தெப்பக்குளம் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான ஆவணம் கிடைத்தவுடன், அதுவும் மீட்கப்படும்'' என்றார். விரைவில் அரசிடமிருந்து நற்செய்தி வரும் என எதிர்பார்கின்றோம். மேலும் படிக்க

Thirumangalam Meenakshi amman temple Kumbabishegam works stopped due to insufficient money.

No comments:

Post a Comment