Monday, September 7, 2015

அரசு ஓமியோபதி கல்லூரி விடுதியை முதலமைச்சர் திறந்து வைத்தார் | Tirumangalam.com

திருமங்கலத்தில் அமைந்திருக்கும் அரசு ஓமியோபதி கல்லூரியின் ஆண்கள் விடுதி, நவீன சமையல் கூடம் மற்றும் பார்வையாளர்கள் காத்திருக்கும் கூடம் ஆகியவற்றை இன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார்
திருமங்கலம் அரசு ஓமியோபதி கல்லூரி, தமிழகத்தில் செயல்படும் ஒரே அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியாகும். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓமியோபதி மருத்துவம் பயின்று வருகின்றனர். இங்கு தங்கிப் பயிலும் மாணவர்களுக்கென புதிதாய் மாணவர் விடுதி கட்டப்பட்டது. அதனோடு நவீன சமையல் கூடம் மற்றும் பார்வையாளர்கள் காத்திருக்கும் கூடம் ஆகியவை 1 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. அதனை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு. முத்துராமலிங்கம், திருமங்கலம் நகராட்சி துணைத் தலைவர் திரு. சதீஸ் சண்முகம், திருமங்கலம் நகர் அ.இ.அ.தி.மு.க. கிளைச் செயலாளர் திரு. JD. விஜயன் மற்றும.. Read more

No comments:

Post a Comment