Friday, September 4, 2015

வரலாறு சொல்லும் திருமங்கலம் இரயில் நிலைய தண்ணீர் தொட்டி | Tirumangalam.com

எப்போதாவது நம்ம ரயில் நிலையத்திற்கு செல்லும் போது இந்த தொட்டியை பார்த்திருப்பீர்கள். ஆனால் அது என்ன? எதற்கு பயன்பட்டது? எப்போது கட்டப்பட்டது என யோசித்ததுண்டா? தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் கீழ் 1875ம் ஆண்டு மதுரையில் இரயில்வே போக்குவரத்து துவங்கியது. அதற்கடுத்த ஆண்டிலேயே அதாவது 1876ல் திருமங்கலத்தில் புதிய இரயில் நிலையம் அமைக்கப்பட்டது. எதிர்காலத்தில் பெருகவிருகும் மதுரையின் மககள் தொகையைக் கணக்கிற்கொண்டு, முதற்கட்டமாக மதுரையிலுள்ள இரயில் நிலையங்களின் நிலை உயர்த்தப்பட்டது. அவ்வாறு ஆங்கிலேயர் ஆட்சியில் மதுரையிலிருந்து திருமங்கலம் வழியாக மற்றும் தென்தமிழகத்திலிருந்து மதுரைக்கு வரும் அனைத்து அக்கால நீராவி எஞ்சின்களுக்கும் நீர்பிடிப்பு பகுதியாக நீர்வளமிக்க திருமங்கலத்தை தெரிவு செய்தனர் ஆங்கிலேயர்கள். நீராவி என்ஜின்களில் நீர்பிடிப்பிற்காக அதற்குண்டான கருவிகள் மற்றும் இந்த தொட்டியையும் நிறுவினர். தற்போது டீசல் எஞ்சின்கள் புழக்கத்தில் வந்ததால் இதன் பயன்பாடு இழந்து ஆங்கிலேயர் ஆட்சியின் அடையாளமாய் நிற்கிறது.

For more details, click here

No comments:

Post a Comment