Sunday, September 13, 2015

அடிப்படை வசதிகள் செய்து தராததால் தேர்தலை புறக்கணிக்கும் கிராமம் | Tirumangalam.com

திருமங்கலம் அருகே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராமமக்கள் அறிவித்துள்ளனர்
திருமங்கலம் தாலுகா சித்தாலை அருகிலுள்ள குருவனந்தபுரத்தில், குடிநீர், பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தேர்தல் நேரத்தில் வாக்குச்சேகரிப்புக்கு வரும் வேட்பாளர்கள், அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக உறுதியளிக்கிறார்களே தவிர, தங்களுடைய கோரிக்கைகளை பதவிக்கு வந்த பின்பு நிறைவேற்றுவதில்லை என்று கவலை தெரிவிக்கின்றனர். இந்தநிலையில், தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படாவிட்டால், தேர்தலை புறக்கணிக்கப்போவதாக...

Guruvananthapuram village people of Thirumangalam Taluk announced a protest for not providing the basic needs sufficiently.. Read more

காமராசரால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரு. என். எஸ். வி. சித்தன் | Tirumangalam.com

1973ல் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் முதன்முறையாக திரு. என். எஸ். வி. சித்தன் அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் வேட்பாளராக முன்மொழிந்தவர் தமிழக முன்னாள் முதல்வர் திரு. காமராசர்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1934ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 12ம் நாள் என். எஸ். வீரபத்திரத் தேவருக்கு மகனாகப் பிறந்தார். தனது பள்ளிக் கல்வியை திருமங்கலம் பி. கே. என். பள்ளியில் பயின்று, மதுரைக் கல்லூரியில் பொருளியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் 1959ல் சகுந்தலை என்பவரை திருமணம் முடித்தார். அவரது தகப்பனார், திரு. வீரபத்திரத் தேவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் தீவிரமாக ஈடுபட்டதால், சித்தனுக்கும் காங்., கட்சி மீது நாட்டம் ஏற்படவே கட்சியின் பல்வேறு போராட்டங்களில் பங்குகொண்டார். அதன் விளைவாக 1967ல் தமிழக சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டார். அதில் தன்னோடு போட்டியிட்ட இராஜாஜியின் சுதந்திரக் கட்சி வேட்பாளர் திரு. எம். பி. இராஜன் அவர்களை விட 3,257 வாக்குகள் அதிகம் பெற்று முதல் வெற்றி கண்டார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்தித் திணிப்பை எதிர்க்கும் போராட்டத்தால் தமிழகத்தில் காங்., கட்சியின் செல்வாக்கு சரிவடைந்த (சொந்த ஊரான விருதுபட்டியில் காமராசரை தோற்கடிக்கப்பட்ட) அதே 1967ல் வெற்றி பெற்ற ஒரு சிலருள் ..

Thiru. NSV Chitthan, who was recommended for Dindigul Parliamentary Election 1973 by the former CM Thiru. Kamarasar. Read more

Thursday, September 10, 2015

துரித கட்டுமானப் பணிகள் நடைபெறும் திருமங்கலம் அரசு கலைக் கல்லூரி | Tirumangalam.com

திருமங்கலம் தியாகராசர் மில் எதிரே கட்டப்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரிக்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றது. எதிர்வரும் கல்வியாண்டுக்குள் முடிக்கப்பட்டு திறக்கப்படலாம்.
திருமங்கலம் மற்றும் அதன் தாலுகா மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு கலைக் கல்லூரி, தமிழக அரசால் கடந்த 2012ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, திருமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒரு பகுதியாய் செயல்படத் துவங்கியது. மறுபுறம் கல்லூரிக்கான கட்டிடம் அமைக்க நிலங்கள் கப்பலூர், தியாகராசர் மில் எதிரே அரசு கால்நடை பராமரிப்பு அலுவலகத்தின் அருகே தெரிவு செய்யப்பட்டன. கட்டிடம் கட்ட 2014 ஆண்டு செப். 23ம் நாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் காணொளிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். மேலும் கல்லூரி கட்டுவதற்காக 7 கோடியே 25 லட்சம் ரூபாயும் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. கட்டிடப்பணிகள் ஆரம்பித்து ஏறத்தாழ ஓராண்டு நிறைவடைந்த நிலையில் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றது. எப்படியும் வரும் 2016 கல்வியாண்டிற்குள் பணிகள் முடிவடைந்து திறப்பு விழா காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

The construction work for Thirumangalam Govt Arts College is in full swing. Read more

Wednesday, September 9, 2015

பள்ளி அருகே பாழடைந்த கிணறு, தண்ணீர்த் தொட்டி - அச்சத்தில் குழந்தைகள் | Tirumangalam.com

கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி எதிரே பாழடைந்த கிணறு, இடியும் நிலையில் உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டியால் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடியில் பழமையான ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. 2 ஆசிரியைகள், 32 குழந்தைகள் உள்ளனர். பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையமும் உள்ளது. இங்கு 20 குழந்தைகள் உள்ளனர். ஓடுகளால் வேயப்பட்ட கட்டடம் பழுதடைந்ததால், அதை அகற்றாமல் புதிய கட்டடம் அமைக்கப்பட்டது. பள்ளி எதிரே 30 அடி அகலம் கொண்ட பாழடைந்த கிணறு மூடப்படாமல் உள்ளது. அருகே இடியும் நிலையில் பயனற்ற மேல்நிலை தண்ணீர் தொட்டியும் உள்ளது. கிணற்றில் குப்பை, இறைச்சிகள் கொட்டப்படுவதால், குழந்தைகள் மூக்கை 'பிடிக்கும்' நிலை உள்ளது. அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது.

Kalligudi Primary School Students in afraid of the old well near school. Read more

மறவன்குளம் மெப்கோ தொழிற்சாலை அருகே வட்டமிடும் வவ்வால்கள் | Tirumangalam.com

இன்று காலை திருமங்கலத்திலிருந்து மறவன்குளம் வழியாக கடந்து சென்ற போது நடந்த தற்செயலான நிகழ்வு. முதலில் பறவைக் கூட்டம் என்று தான் நினைத்தேன். பின்பு தான் தெரிந்தது அது வவ்வால் கூட்டம் என்று!
Colony of Bats flied near Maravankulam Mepco Industry this morning. Read more

Tuesday, September 8, 2015

திருமங்கலத்தில் இரயில்வே பாலம் அமைக்க அரசிடம் எம்.எல்.ஏ கோரிக்கை | Tirumangalam.com

திருமங்கலத்தில் இரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என எம். எல். ஏ சட்டமன்றத்தில் வேண்டுகோள்.
திருமங்கலம் நகரின் மையப்பகுதியில் இருந்து மதுரை விமான நிலையம் செல்லும் ஆறுமுக சாலையின் வழியில் ஒரு இரயில்வே கேட் உள்ளது. அதனைக் கடந்து தான் திருமங்கலத்தில் இருந்து ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்ல முடியும். மருத்துவமனை, கல்வி என எந்தவொரு காரியங்களுக்கும் திருமங்கலத்தை நம்பியுள்ள அந்த கிராமங்கள் இந்தக் இரயில்வே கதவைக் கடந்து தான் செல்ல முடியும். திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட ஏறத்தாழ 30 விழுக்காட்டு மக்கள் இதனைக் கடந்து தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் மதுரை - நெல்லை இரயில்வே வழித்தடத்தில் ஒரு நாளிற்கு ஏறத்தாழ 20க்கும் .. Read more

Monday, September 7, 2015

அரசு ஓமியோபதி கல்லூரி விடுதியை முதலமைச்சர் திறந்து வைத்தார் | Tirumangalam.com

திருமங்கலத்தில் அமைந்திருக்கும் அரசு ஓமியோபதி கல்லூரியின் ஆண்கள் விடுதி, நவீன சமையல் கூடம் மற்றும் பார்வையாளர்கள் காத்திருக்கும் கூடம் ஆகியவற்றை இன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார்
திருமங்கலம் அரசு ஓமியோபதி கல்லூரி, தமிழகத்தில் செயல்படும் ஒரே அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியாகும். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓமியோபதி மருத்துவம் பயின்று வருகின்றனர். இங்கு தங்கிப் பயிலும் மாணவர்களுக்கென புதிதாய் மாணவர் விடுதி கட்டப்பட்டது. அதனோடு நவீன சமையல் கூடம் மற்றும் பார்வையாளர்கள் காத்திருக்கும் கூடம் ஆகியவை 1 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. அதனை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு. முத்துராமலிங்கம், திருமங்கலம் நகராட்சி துணைத் தலைவர் திரு. சதீஸ் சண்முகம், திருமங்கலம் நகர் அ.இ.அ.தி.மு.க. கிளைச் செயலாளர் திரு. JD. விஜயன் மற்றும.. Read more

உழைத்துக் களைத்தவன் இளைப்பாறும் திருமங்கலம் தூங்குமூஞ்சி மண்டபம் | Tirumangalam.com

திருமங்கலத்தில் தூங்குமூஞ்சி மண்டபம் பற்றி கேள்வி பட்டிருக்கீங்களா? வாருங்கள் தெரிந்து கொள்வோம்
சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாய் குண்டாற்றின் மேற்குக் கரையில், காட்டு பத்திரகாளியம்மன் கோயில் செல்லும் வழியில், பசுமை சூழ அமைந்துள்ளது இந்த தூங்குமூஞ்சி மண்டபம். குண்டாற்றை நம்பி விவசாயம் நடந்து வந்த காலத்தில், வயலில் வேலை செய்து களைப்பாய் வரும் விவசாயிகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் இளைப்பாற ஏற்ற இடமாக இருந்தது. யாராக இருந்தாலும் இங்கு வந்து அமர்ந்த ஐந்து நிமிடங்களில் தூங்கிவிடுவார்களாம். இங்கு உள்ள கிணற்றில், மோந்து குடிக்கும் அளவிற்கு நீர் இருக்குமாம். காலப்போக்கில் ஆற்றில் நீர் வராததால் விவசாயமும் குறைந்தது, தற்போது இந்த இடம் குண்டாறு ஊற்று.. Read more

Sunday, September 6, 2015

அந்நிய படையெடுப்பினால் அழிந்துபோன கோட்டைமேடு கிராமம் | Tirumangalam.com

தொடர்ச்சியான அந்நியர்களின் படையெடுப்பினால் மொத்தமும் அழிந்துபோன கோட்டைமேடு கிராமம்
திருமங்கலம் அருகே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அந்நியர்களின் படையெடுப்பினால் அழிக்கப்பட்ட கிராமம் தான் கோட்டைமேடு. திருமங்கலம் வட்டம் நேசனேரி கிராமத்தின் வடக்கே வயல்வெளிகளின் நடுவில் சுமார் 50ஏக்கர் பரப்பளவில் ஆளுயர கோட்டைச் சுவர் எழுப்பி, மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னர்களில் ஒருவர் இங்கு கோட்டை போன்று அமைத்ததாக கூறப்படுகின்றது. இதனைச் சுற்றியுள்ள மீனாட்சிபுரம், கரிசல்களாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் தாய் கிராமமாக விளங்கியது. மழை வெள்ளம் ஏற்படும் காலங்களில் மக்கள் இங்கு தான் தஞ்சம் புகுவார்களாம். பின்னர் மதுரை மீது படையெடுத்த மாலிக் கபூரினால் தான் இந்த கோட்டையும் அழிக்கப்பட்டது என சுற்றியுள்ள ஊர் மக்கள் தெரிவித்தனர். இன்றும், இப்பகுதியில் சென்றால் முதுமக்கள் தாழி, மண்பாண்டங்கள் போன்றவை காலில் தட்டுப்படும். Read more

Saturday, September 5, 2015

கல்விக்காக தன்னையே அர்பணித்த தலைமை ஆசிரியர் திரு. அருணாசலம் | Tirumangalam.com

காமராசர் முதலைச்சராக பொறுப்பேற்றதும் தமிழகத்தில் புதிய கல்விமுறையைக் அமைக்க ஐவர் கமிட்டியை உருவாக்கினார். அதில் ஒருவரான நம் பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலையாசிரியர் திரு. மா. அருணாசலம் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
திரு. மா. அருணாசலம் அவர்கள், 1912ம் ஆண்டு அக்டோபர் 14ம் நாள் மாரியப்ப நாடார் பூவாயியம்மாள் ஆகியோருக்கு மகனாக விருதுநகரில் பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை விருதுநகர் கே. வி. எஸ் பள்ளியிலும் பட்டப் படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், Literature of Teaching படிப்பை செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் முடித்து பொருளியல் துறையின் பட்ட மேற்படிப்பில் சென்னை மாகாண அளவில் இரண்டாமிடம் பெற்றார். பின்னர் இந்தியக் குடிமைப் பணியில் (Indian Civil Service) தேர்வானார். ஆனால் அவர் படித்த விருதுநகர் கே. வி. எஸ். பள்ளியில் உதவி தலைமையாசிரியர் பணி கிடைக்கவே அங்கு மாற்றலானார்.. Read more

Friday, September 4, 2015

வரலாறு சொல்லும் திருமங்கலம் இரயில் நிலைய தண்ணீர் தொட்டி | Tirumangalam.com

எப்போதாவது நம்ம ரயில் நிலையத்திற்கு செல்லும் போது இந்த தொட்டியை பார்த்திருப்பீர்கள். ஆனால் அது என்ன? எதற்கு பயன்பட்டது? எப்போது கட்டப்பட்டது என யோசித்ததுண்டா? தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் கீழ் 1875ம் ஆண்டு மதுரையில் இரயில்வே போக்குவரத்து துவங்கியது. அதற்கடுத்த ஆண்டிலேயே அதாவது 1876ல் திருமங்கலத்தில் புதிய இரயில் நிலையம் அமைக்கப்பட்டது. எதிர்காலத்தில் பெருகவிருகும் மதுரையின் மககள் தொகையைக் கணக்கிற்கொண்டு, முதற்கட்டமாக மதுரையிலுள்ள இரயில் நிலையங்களின் நிலை உயர்த்தப்பட்டது. அவ்வாறு ஆங்கிலேயர் ஆட்சியில் மதுரையிலிருந்து திருமங்கலம் வழியாக மற்றும் தென்தமிழகத்திலிருந்து மதுரைக்கு வரும் அனைத்து அக்கால நீராவி எஞ்சின்களுக்கும் நீர்பிடிப்பு பகுதியாக நீர்வளமிக்க திருமங்கலத்தை தெரிவு செய்தனர் ஆங்கிலேயர்கள். நீராவி என்ஜின்களில் நீர்பிடிப்பிற்காக அதற்குண்டான கருவிகள் மற்றும் இந்த தொட்டியையும் நிறுவினர். தற்போது டீசல் எஞ்சின்கள் புழக்கத்தில் வந்ததால் இதன் பயன்பாடு இழந்து ஆங்கிலேயர் ஆட்சியின் அடையாளமாய் நிற்கிறது.

For more details, click here

Thursday, September 3, 2015

திருமங்கலம் மீனாட்சி கோயில் கும்பாபிசேகம் எப்போது நடக்கும்? | Tirumangalam.com

திருமங்கலம் மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிசேகப் பணிகளுக்கு அரசிடமிருந்து போதிய நிதி இல்லாததால் பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மனுக்கு, திருமாங்கல்யம் செய்து கொடுக்கப்பட்டதாக நம்பப்படும் திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் 12 ஆண்டுகளை கடந்தும் கும்பாபிசேகம் நடக்கவில்லை. இந்தாண்டு தொடக்கத்தில், உபயதாரர்களால் மராமத்து பணிகள் துவங்கின. கோயிலுக்குள் புதிய மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டது. தற்போது மராமத்து பணி, சிலைகளுக்கு வர்ணம் தீட்டி புதுப்பிப்பது போன்ற பணிகளுக்கு போதிய நிதி இல்லை. தமிழக அரசிடமிருந்தும் எந்தவொரு அறிவிப்போ, போதிய நிதி ஒதுக்கீடோ இல்லை. நிதி ஒதுக்காததால் கும்பாபிசேக பணி தாமதமாகிறது. நிர்வாக அலுவலர் மாலதி கூறுகையில், ''விரைவில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. கோயில் தெப்பக்குளம் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான ஆவணம் கிடைத்தவுடன், அதுவும் மீட்கப்படும்'' என்றார். விரைவில் அரசிடமிருந்து நற்செய்தி வரும் என எதிர்பார்கின்றோம். மேலும் படிக்க

Thirumangalam Meenakshi amman temple Kumbabishegam works stopped due to insufficient money.

Wednesday, September 2, 2015

சேடபட்டி, சென்னம்பட்டி, கோட்டைப்பட்டியில் நாளை மின்தடை நேர அறிவிப்பு | Tirumangalam.com

சேடபட்டி, சின்னக்கட்டளை, சென்னம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நாளை (செப். 3) மின்தடை
நாளை (செப். 3) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல்நத்தம், மங்கல்ரேவு, எஸ். கோட்டைப்பட்டி, கணவாய்ப்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி,, அயோத்திப்பட்டி, அல்லிகுண்டம், கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரியகட்டளை, செட்டியபட்டி, ஆவல்சேரி, கே.ஆண்டிப்பட்டி, வீராணம்பட்டி, தொட்டனம்பட்டி, ஜம்பலப்புரம், கேத்துவார்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது மேலும் படிக்க

There will be a power shutdown in Sedapatti, Chinnakattalai, sennampatti, s.kottaippatti, mangalrev, perungamanallur, jambalapuram, k.andipatti and its surroundings

Tuesday, September 1, 2015

நகராட்சி துப்புரவாளர்கள் வேலை நிறுத்தத்தால் நாறுது திருமங்கலம் | Tirumangalam.com

திருமங்கலம், மேலுார் துப்புரவு தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், குப்பை அள்ளப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது




மே தினம், சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி விடுமுறை நாட்களுக்கு முழு நேர விடுப்பு வழங்குதல், சஸ்பெண்ட் ஊழியர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு, பழிவாங்கும் போக்கை கைவிடல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மேலுார், திருமங்கலம் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.மதுரை கோச்சடையில் நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம் முன், உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சம்மேளன மாநில குழு உறுப்பினர் ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இயக்குனர் (பொறுப்பு) கனகராஜிடம் மனு அளித்தனர். ராமசாமி கூறியதாவது: மேலுார், திருமங்கலம் நகராட்சிகளில், துப்புரவு பணிக்கு தலா 250 முதல் 300 பேர் தேவை. மேலுாரில் 58 பேர், திருமங்கலத்தில் 80 பேர் மட்டுமே உள்ளனர். விடுப்பில் செல்பவர்களை கழித்தால் பணியில் இருப்பவர்கள் சொற்பமே. துப்புரவு பணியாளர்களுக்கான கோரிக்கைகள் பல ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை. பேச்சுவார்த்தைக்கு இன்று (செப்.,1) வரும்படி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார் என்றார். மேலுார், திருமங்கலத்தில் குப்பை அள்ளாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. குப்பையை அகற்ற நகராட்சி கமிஷனர்கள் சுருளிநாதன், அப்துல்ரஷீத் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர். பணியாளர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றனர்.
மேலும் படிக்க