சிவரக்கோட்டை - ஆபத்தின் விளிம்பில் திருமங்கலத்தின் சிறு தானிய களஞ்சியம் | Tirumangalam.com
திருமங்கலம் வட்டம் சிவரக்கோட்டை கிராமம் சிறுதானியங்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று சிறுதானிய களஞ்சியமாக திகழ்கிறது. ஆனால் அதற்கு பெரும் ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது. சிவரக்கோட்டை ஊரணியைச் சுற்றிலும் கண்ணில் படும் தூரமெல்லாம் ஏறத்தாழ 70 வகையான தானியங்கள் விளைய வைக்க கூடிய கரிசக்காடு. இன்றும் திணை, துவரை, வரகு, உளுந்து, கம்பு, பாசிப்பயறு, கேழ்வரகு, தட்டைப்பயறு, குதிரைவாலி, மொச்சை, சோளம், கொள்ளு, மக்காச்சோளம், சுண்டல், சாமை, வெண்டி, மல்லி, கொத்தவரை, எள், மொச்சைக்காய், ஆமணக்கு, பீர்க்கை, ஓமம், பருத்தி, அவுரி, வேம்பு, நித்யகல்யாணி, புளி என 30க்கும் மேற்பட்ட வகையான பயிர்கள் ரசாயன உரமில்லாமல் பயிரடப்படுகின்றன. ஆனால் இதற்கு பேராபத்து வருகிறது கிட்டத்தட்ட 4000 ஏக்கர் விவசாய நிலப்பரப்பை தரிசு நிலம் எனக் கூறி விவசாயிகளிடம் அபகரித்து சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்க அரசு தயராகி வருகிறது. இதை கேட்டவுடன். அந்த ஊர் பெரியவர் இராமலிங்கம் அவர்களின் குமுறல்கள் இவை. ஊர் மக்களோடு போராடி வருகிறார். இளைஞர்களை பார்த்ததும் அவர் முகத்தில் அவ்வளவு சந்தோசம். இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் நீர் இருக்கும் விவசாய நிலங்களையே குறி வைக்கின்றனர் அரசும் உடந்தை. நிலத்தை இவர்களிடம் கொடுத்த விட்டு விவசாயிகள் என்ன செய்வர்? வேலை கூட கொடுக்க மாட்டான். படிக்காதவன் எனக்கூறி அவன் கம்பெனியில் அதிகபட்சமாக காவல் காக்கும் வேலையும், கழிவறை கழுவும் வேலையும் கிடைக்கும். நீர்நிலை குறித்தான தவறான தகவல்கள் வெளியிடுதல் என ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் முரண்பட்டு செயல்படுகின்றனர். இதனால் எதனை சாதிக்கப் போகிறார்கள் என்பதற்கு “சிப்காட்” (SIPCOT) அதாவது சிறப்பு பொருளாதார மண்டலம்.
Tirumangalam taluk Sivarakottai's wealthy farm lands are going to be a rustic SIPCOT
For news in detail:
www.tirumangalam.com/