Monday, August 24, 2015

மறவன்குளம் அருகே ஓடும் இரயிலில் எட்டுப் பெட்டிகள் பிரிந்தது | Tirumangalam.com

திருமங்கலம் அருகே மறவன்குளம் அருகே ஓடும் இரயிலில் எட்டுப் பெட்டிகள் கழண்டன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி மாவட்டம் மீளவட்டானுக்கு சரக்கு ரயில் ஒன்று நேற்று காலை  சென்றது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த மறவன்குளம் அருகே சென்றபோது பின்னால் இருந்த 8 பெட்டிகள் தனியாக பிரிந்து நின்றன.  இதையடுத்து டிரைவர் ரயிலை நிறுத்தினார்.  தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவ்வழியகா வந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மதுரையில் இருந்து ரயில்வே ஊழியர்கள் வந்து பழுதாகி நின்ற சரக்கு பெட்டிகளை சரி செய்து, திருமங்கலம் ரயில் நிலையத்துக்கு  மெதுவாக  ஓட்டிச் சென்றனர். இதனை தொடர்ந்து நெல்லையில் இருந்து ஈரோடு மற்றும் மயிலாடுதுறைக்கு செல்லும் பயணிகள் ரயில், செங்கோட்டை - மதுரை  உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் சுமார் 1 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு மதுரைக்குச் சென்றன.


Sensation near Thirumangalam 8 Compartments in a moving freight train gone split

For more details, Click here

No comments:

Post a Comment