Wednesday, August 12, 2015

மேலக்கோட்டையிலிருந்து ஜிம்பலக்கடி பம்பா ஆப்பிரிக்கா அங்கிள் | Tirumangalam.com

ஜிம்பலக்கடி பம்பா ஆப்பிரிக்கா அங்கிளின் சொந்த ஊர், நம்ம திருமங்கலம் அருகேயுள்ள மேலக்கோட்டை தானாம்.


1980கள் மற்றும் 90களில் கிராமத்துப் பின்னணி கொண்ட கதைகளில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியுடன் நடித்தவர்களுள் ஒருவர் சுப்பையா. அக்காலத்தில் திரைத்துறையில் சுப்பையா என்று ஏற்கனவே இரண்டு பேர் இருந்ததால் இவரின் நிறத்தை வைத்து கருப்பு சுப்பையா என்று அழைக்கப்பட்டார். (மற்றொருவர் வெள்ளை சுப்பையா) 1980கள் மற்றும் 90களில் கவுண்டமணியுடனே ஏறத்தாழ 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆரம்ப காலங்களில் எங்க ஊர் பாட்டுக்காரன், திருமதி பழனிச்சாமி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தாலும் பின்னர் வந்த படங்களான பெரிய மருது, செந்தூரப்பூவே, பட்டத்துராணி, ஜல்லிக்கட்டுக் காளை, கட்டபொம்மன் ஆகிய படங்களின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றார். அதிலும் ஜல்லிக்கட்டுக் காளை படத்தில் வரும் ஜம்பலக்கடி பம்பா எனும் கதாபாத்திரம், பெரிய மருது படத்தில் வரும் அண்டாவுக்கு ஈயம் பூசும் கதாபாத்திரம், கட்டபொம்மன் படத்தில் ஆயிரம் மூட்டை நெல் அரவை செய்ய வரும் கதாபாத்திரம் ஆகியவை இன்றைய இளைஞர்கள் முதற்கொண்டு இரசிக்கின்றனர்.


இவரது கடைசி காலங்களில் மிகவும் நோய்வாய்ப் பட்டு கடந்த 2013ம் ஆண்டு இயற்கை எய்தினார். இவரது சொந்த ஊர் - திருமங்கலம் தாலுகா, மேலக்கோட்டை கிராமம்.

For more details, Click here

No comments:

Post a Comment