Tuesday, August 11, 2015

இனி எந்த மின்சார வாரியத்திலும் மின் கட்டணம் செலுத்தலாம் | Tirumangalam.com

:தமிழகத்தில் எந்த நகரத்திலுள்ள மின்வாரிய அலுவலகத்திலிருந்தும் கரண்ட் பில் கட்டும் முறை திருமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் நேற்று முதல் செயல்படத்துவங்கியது



தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒரு மண்டலத்திற்குள் கரண்ட் பில் அந்தந்த மண்டலத்திற்குரிய மின்வாரிய அலுவலகத்தில் மட்டுமே கட்டும் முறை இதுவரை நடைமுறையில் உள்ளது. அதே நேரத்தில் ஆன்லைன் மூலமாக எந்த இடத்திற்கும் மின்கட்டணம் செலுத்தும் வசதி ஏற்கனவே உள்ளது. திருமங்கலத்தில் மத்திய அரசு நிதி உதவியுடன், மின் விநியோக சீரமைப்பு திட்டத்தின் கீழ், புதிய மென் பொருள் மூலம் புதிய கணக்கீடு மற்றும் வசூல் பணிகள் துவக்கப்பட்டன.இதன் மூலம் எந்த மின்வாரிய அலுவலகத்திலும் மின் கட்டணம் செலுத்த முடியும்.. இந்த சாப்ட்வேர் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி மற்றும் திருமங்கலம்,  மேலூர், உசிலம்பட்டி ஆகிய மூன்று நகராட்சிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. மதுரை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் நல்லம்மாள் துவக்கிவைத்தார். மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஈஸ்வர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். திருமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் மகாராஜன், உதவி பொறியாளர்கள் பாலமுருகன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


For more details: Read here

No comments:

Post a Comment