எப்போதும் பரபரப்பாக இயங்கும் திருமங்கலத்து வீதிகள் திரு. அப்துல்கலாம் மறைவினால் வெறிச்சோடின
மதுரையிலிருந்து அனேக தென் மாவட்டகள் மற்றும் தெற்கு கேரளம் ஆகியவற்றிற்கு செல்ல திருமங்கலத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும். அதனால் திருமங்கலத்தின் மதுரை, விருதுநகர் மற்றும் கடைவீதிகள் நிறைந்திருக்கும் உசிலம்பட்டி ஆகிய சாலை எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். திரு. அப்துல்கலாமின் மறைவையொட்டி திருமங்கலம் அனைத்து வியாபாரிகள் சங்கம் அழைப்பு விடுத்ததன் பேரில் திருமங்கலத்தில் அனைத்து கடைகளும் இன்று முழு அடைப்பு செய்யப்பட்டது. துணிக்கடை, பலசரக்குக்கடை, நகைக்கடை, பாத்திரக்கடை, பேன்சி ஷாப்கள் என அனைத்தும் மூடப்பட்டன. திருமங்கலத்தின் அனைத்து வியாபாரிகளும் பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளித்தனர்.
மேலும் அறிய
Tirumangalam.com
No comments:
Post a Comment